ரஜினி பெயர் ஏற்படுத்திய குழப்பம்
சென்னை:
நடிகர் ரஜினி காந்த் ஓட்டுப் போட வந்தபோது, அ.தி.மு.க தேர்தல் ஏஜென்டு திடீர் பிரச்சினையைக் கிளப்பினார்.இதனால் சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.
நடிகர் ரஜினி காந்த், தேர்தல் நெருங்கும் வரை மிகவும் அமைதியாக இருந்தார். தேர்தலில் யாருக்கு ஆதரவு என்றுகூட அவர் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் ஓட்டுப் போட வருவாரா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும்இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் ரஜினி காந்த் ஓட்டுப் போட வந்தார். அப்போது பூத்தில் இருந்தஅ.தி.மு.க. ஏஜென்டு, கடந்த தேர்தலில் ரஜினி காந்த்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் சிவாஜி ராவ் என்றுஇருந்தது. இந்த தேர்தலில் அவரது பெயர் ரஜினி காந்த் என்று உள்ளது. எனவே ரஜினி ஓட்டுப் போடுவதைஅனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.
இதையடுத்து ரஜினியுடன் வந்திருந்த அவரது ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா குறுக்கிட்டு, வாக்காளர்அடையாள அட்டையில் ரஜினி காந்த் என்றுதான் உள்ளது என்று விளக்கினார்.
அப்போது தி.மு.க. ஏஜென்டு எழுந்து, அ.தி.மு.க ஏஜென்ட்டைப் பார்த்து, ரஜினி காந்த்தை உங்களுக்குத்தெரியாதா என்று சத்தமாக கேட்டார். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சில விநாடிகளுக்குப் பிறகுஅனைவரும் சமாதானம் அடைந்தனர். அதன் பிறகு ரஜினி ஓட்டுப் போட்டு விட்டு பறந்தார்.