வேலூார் சிறையில் அடைக்கப்படுகிறார் ஜான் பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வியாழக்கிழமை நடந்த தேர்தல் வன்முறை தொடர்பாகப் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியன்வேலூர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
தமிழ்நாட்டில் பெரிய ரெளடி என்று பெயர் பெற்ற, தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்,வியாழக்கிழமை தேர்தலின்போது சென்னையில் பயங்கரமான வன்முறையில் ஈடுபட்டார்.
எழும்பூரில் உள்ள திமுக அலுவலகத்தை ஒரு கும்பலோடு சென்று தாக்கிய ஜான் பாண்டியன், தமிழக சட்டசபைத்துணை சபாநாயகர் பரிதி இளம் வழுதியையும் அடித்துக் காயப்படுத்தினார்.
பின்னர், அங்கிருந்து சென்ற ஜான் பாண்டியன் கோஷ்டியினர், மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் நாஞ்சில்மனோகரனின் வீட்டில் புகுந்து அங்கிருந்த கார்களை அடித்து நொறுக்கினர்.
இதைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியனும் அவருடைய ஆதரவாளர்களும், வேலூர்ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications