For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அ.தி.மு.கவினர் கொடுத்த லட்டு சாப்பிட்ட 200 பேர் மயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

கடமலைக்குண்டு (தேனி):

வருஷநாடு பகுதியில் வாக்களிக்க வந்தவர்களுக்கு அ.தி.மு.கவினர் கொடுத்த லட்டை சாப்பிட்ட குழந்தைகள்உள்ளிட்ட 200 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகசட்டசபை தேர்தல் வியாழக்கிழமை நடந்தது. தேனி மாவட்டம் வருஷநாடு அருகே இருக்கும்தும்மக்குண்டில் 850 வாக்காளுக்கு அ.தி.மு.கவினர் வியாழக்கிழமை லட்டுகளை கொடுத்தனர்.

லட்டுகள் வாக்காளர்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட்டது. லட்டு சாப்பிட் குழந்தைகள்உள்ளிட்ட 200 பேருக்கு கடும் வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஏற்பட்டது.

இந்த லட்டுகள் புதன்கிழமை இரவு தயாரிக்கப்பட்டன. லட்டு தயாரிக்கும் போது ஏதேனும் விஷ ஜந்துக்கள்விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


லட்டு சாப்பிட்டவர்களில் ரோன்னின (வயது 1), அன்னத்தாய் (வயது 60), விவேக் (வயது 7), அகிலா (வயது 4),சதீஷ்குமார் (வயது 4), சிவா (வயது 7), கெளதம் (வயது 8), சுதா (7) ஆகிய 8 பேர் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர்

தம்மக்குண்டு, உருட்டிமேடு, கோடாறியூத்து, மணலாற்று குடிசை, தண்டியகுளம், காந்திகிராமம் ஆகிய இடங்களைச்சேர்ந்தவர்களும் வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் வருஷநாட்டிலும் அதற்கு அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X