"வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது
டெல்லி:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்துக்கொடுத்த நிறுனத்தினர் கூறியுள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் வியாழக்கிழமை நடந்தது. வாக்குப்பதிவுமுழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் இத்தேர்தலில்தான் நடத்தப்பட்டது.
67,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப்இந்தியாவலிருந்தும் (இ.சி.ஐ.), 67,000 வாக்குப்பதிவு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்கம்பெனி (பி.இ.எல்) நிறுவனத்திடமிருந்தும் தேர்தல் ஆணையம் வாங்கியது.
இந்த இரு நிறுவனங்களும் முன்னரே வாக்கு பதிவு இயந்திரங்களை தயாரித்துக் கொடுத்தன என்பதுகுறிப்பிடத்தக்கது. 1989ம் ஆண்டு 1,50,000 வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்து கொடுத்தன.
ஒரு இயந்திரத்தின் விலை ரூ 7,000 முதல் ரூ 8,000 வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடந்த சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுஏற்படட்டதால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமானது.
இதனால் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடிசெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் புகார் கூறப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை, வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்தவிதமானமோசடியும் செய்ய முடியாது என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்துக் கொடுத்த இருநிறுவனங்களும் கூறியுள்ளன.
இது குறித்து இ.சி.ஐ. மூத்த தொழில்நுட்ப அதிகாரி முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை மாற்ற முடியாது. ஒரு முறை வாக்கு பதிவுசெய்யப்பட்டுவிட்டால் அவற்றை எந்த விதத்திலும் மாற்ற முடியாது. இயந்திரங்கள் பொய்சொல்லாது.
இயந்திரங்கள் மீது சுத்தியல் போன்ற கடினமான பொருட்கள் விழுந்தால் இயந்திரங்கள் நொறுங்கிப்போகும் வாய்ப்பு உள்ளது. இயந்திரங்கள் மேசையின் மீது கீழே விழுந்தால் கூட இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் அழியாது.
பி.இ.எல். பொது மேலாளர் ஷர்மா கூறுகையில், 1989ம் ஆண்டு பல வாக்குப்பதிவு இயந்திரங்களைவிற்பனை செய்தோம். அப்போது நடந்த தேர்தலில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இயந்திரங்களில் ஏற்படும் சிறு குறைகளை பொருட்படுத்தக்கூடாது. தவறுகள் 0.0005 சதவிகிதம்என்ற அளவில்தான் இருக்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பணத்தையும், காதிதத்தையும் மிச்சப்படுத்துகிறது. ஒவ்வொருதேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அதிக அளவிலான காகிதங்களைசெலவிட வேண்டியிருந்தது. இப்போது அது தேவையில்லை.
வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்து தேர்தல் முடிவுகளும் 24 முதல் 48மணி நேரத்திற்குள் வெளியாகிவிடும்.
சில தொழில்நுட்ப பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடமும் அவை கையாளப்பட்ட விதமும் கூட பழுது ஏற்படகாரணமாக இருக்கலாம்என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications