தூர்தர்ஷன் கணிப்பு வெறும் குப்பை: பாண்டி. காங். தலைவர்
சென்னை:
பாண்டிச்சேரி தேர்தல் முடிவுகள் குறித்து தூர்தர்ஷன் நடத்திய வாக்குச்சாவடி கருத்துக் கணிப்பு வெறும் குப்பைஎன்று அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
வியாழக்கிழமை தமிழக சட்டசபையுடன் சேர்த்து பாண்டிச்சேரி சட்டசபையின் 30 தொகுதிகளுக்கும் தேர்தல்நடந்தது. இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, வாக்களித்து விட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம்யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று தூர்தர்ஷன் சார்பில் கேள்வி கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விகளின் அடிப்படையில் எந்தக் கட்சி எத்தனை வாக்குகளைப் பெற்றுள்ளது, பெறக் கூடியதொகுதிகளின் வாய்ப்பு குறித்து கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் அதிமுககூட்டணியும், பாண்டிச்சேரியில் திமுக கூட்டணியும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
நாராயணசாமி கண்டனம்:
இந்தக் கருத்துக் கணிப்புக்கு நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2தொகுதிகளில் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்தி விட்டு மாநிலம்முழுவதிலும் திமுக கூட்டணிதான் ஆட்சிக்குவரும் என்று தூர்தர்ஷன் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை யாரும் நம்பமாட்டார்கள்.
இந்தக் கருத்துக் கணிப்பு வெறும் குப்பை. பாண்டிச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைப்பிடிக்கும் என்றார் அவர்.