தேர்தல் வன்முறைக்கு 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
5 மாநிலங்களில் வியாழக்கிழமை நடந்த சட்டசபைத் தேர்தலில் வன்முறைக்கு 13 பேர் பலியாயினர்.
அசாமில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உள்பட 6 பேர் இறந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமூல்காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 3 பேர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தொண்டர் 2 பேர் உள்பட 6 பேர்பலியாயினர். கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இது தவிர, பாண்டிச்சேரியில் போலீசார் நடத்திய தடியடி காரணமாக வாக்களித்துவிட்டு வந்த 65 வயது முதியவர்ஒருவர் இறந்தார். கேரளாவில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, மாரடைப்பினால் 3பேர் இறந்தனர்.
வன்முறை காரணமாக தமிழகத்தில் 12 பேரும், மேற்கு வங்கத்தில் 10 பேரும், அசாமில் 7 பேரும் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications