பாமக - புதுவை மக்கள் காங்.தொண்டர்கள் மோதல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பாமக தொண்டர்களுக்கும் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையேதகராறு ஏற்பட்டது.
பாண்டிச்சேரியில் குருசுக்குப்பம் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாத காரணத்தால் பாமக தொண்டர்கள் தேர்தல்அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
அப்போது ஒரு கட்சித் தொண்டர் மலர்மன்னன் என்பவரின் ஆதரவாளர்களுக்கும், இன்னொரு கட்சித்தொண்டர்களுக்கும் இடையே பிரச்சனை, கைகலப்பு ஏற்பட்டது.
இதில் 8 பேர் காயமடைந்தனர். இரு கட்சித் தொண்டர்களும் ஆயுதங்களால் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். மலர்மன்னனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாகப் போலீஸார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications