தேர்தலை புறக்கணித்த 4 கிராம மக்கள்
சேலம்:
சேலம் மாவட்டம் நொய்யமலை கிராமம் உள்பட 4 கிராம மக்கள் ஒரு ஓட்டுக் கூட போடாமல் தேர்தலைப்புறக்கணித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நொய்யமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்கள் மற்றும்பெண்களுக்கு ஒரு பொது வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
இங்கு வாக்காளர்களாக 947 பேர் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 475 பேரும் பெண்கள் 472 பேரும் உள்ளனர்.இந்த கிராமத்திற்கு ரோடு வசதி, பஸ் வசதி, மின்சார வசதி உள்பட எந்த வசதியும் இல்லை. எனவே, தேர்தலைப்புறக்கணிக்க ஒட்டுமொத்தமாக முடிவு செய்தனர்.
வாக்குச் சாவடிக்கு அதிகாரிகள் சென்றும் அங்கு காலை முதல் மாலை வரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.
இதே போன்று ஈரோடு மாவட்டம், சின்னப்புத்தூர் கிராமம், தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர் வத்தல்மலை, திருச்சிமாவட்டத்தில் பாலகிருஷ்ணன்பட்டி ஆகிய கிராமங்களில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை.
ஒரு வாக்கு மட்டுமே பதிவான வாக்குச்சாவடி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியைச் சேர்ந்த புவணாசிப்பட்டி வாக்குச்சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருபெண்தான் அந்த வாக்கைச் செலுத்தினார்.
புவணாசிப்பட்டி கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்ற காரணத்திற்காக, அந்தக் கிராம மக்கள்தேர்தலைப் புறக்கணித்தனர்.












Click it and Unblock the Notifications