6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
சென்னை:
தமிழகத்தில் ஆறு வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு இந்த ஆறு வாக்குச்சாவடிகளிலும் மறுதேர்தல் நடக்கிறது.
தமிழக தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்தல் முறையாக நடக்கவில்லையென்று தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கூறியபுகாரையடுத்து, தமிழகத்தில் ஆறு தொகுதிகளில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை துறைமுகம், அருப்புக்கோட்டை, வேலூர், திருவெரும்பூர், விழுப்புரம் மற்றும் தூத்துக்குடிதொகுதிகளில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடக்கிறது.
வாக்குச்சாவடிகளில் நடக்கும் தேர்தல் தொடர்பான செய்திகளை மாவட்டக் கலெக்டரிடம் உடனுக்குடன் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.
வாக்குப்பதிவு எண்ணிக்கை ஏற்கனவே குறிப்பிட்டபடி, மே 13 ம் தேதி நடக்கும். அதில் எவ்வித மாறுதலும்இல்லை என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக, துறைமுகம் தொகுதியில் உள்ள செவன் வெல் வாக்குச்சாவடியில் சிபிஐ வேட்பாளர் பாண்டியனை திமுகதொண்டர்கள் தாக்கினர். அப்போது நடந்த வன்முறைச் சம்பவத்தில் இரண்டு அதிமுக தொண்டர்கள்காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் வாக்குப்பதிவு முடியும் சமயத்தில் நடந்தது. இச்சம்பவத்தில் ஒரு டாடா சுமோ வேனும் இன்னொருவாகனமும் அடித்து நொறுக்கப்பட்டன.
இச்சம்பவத்தில் பாண்டியனுடன் வந்திருந்த அதிமுக தொண்டர்கள் பலர் காயமடைந்தனர். சிபிஐ அதிமுககூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.
இதே போல் சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தொண்டர் ஒருவர் திமுக தொண்டர்களால்அடித்துக் காயப்படுத்தப்பட்டார். அவரின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
அவர் பெயர் ஜாஃபர். இவர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications