கொளுத்தும் வெயிலுக்கு முதியவர் பலி
சேலம்:
அக்னிநட்சத்திர வெயிலின் உக்கிரம் தாங்காமல் சேலத்தில் முதியவர் ஒரு பலியானார்.
தமிழகம் முழுவதிலும் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடைகாலத்தில் மக்களைஅதிகமாக வாட்டும் அக்னிநட்சத்திரம் இந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. அது இந்த மாதம் 28ம் தேதி முடிகிறது.
அக்னிநட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் கொடுமை மேலும் அதிகமாகியுள்ளது. வெயிலுடன் சேர்ந்துஅனல் காற்றும் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
காலை, மதிய நேரங்களில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பெரும்பாலும் வீட்டை விட்டுவெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் சேலம் நகரில் அக்னிநட்சத்திர கொடுமைக்கு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாசிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் 65 வயதுடைய முதியவர் நடந்து சென்றுகொண்டிகுந்தார். வெயில் அதிகமாக இருந்தாலும் அந்த முதியவர் நடந்து கொண்டே இருந்தார்.
நீண்ட தூரம் நடந்ததால் வெயிலின் கொடுமையை அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. வெயிலின் கொடுமைதாங்காமல் தீடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.
சிறிது நேரத்தில் அவர் அங்கேயே இறந்து போனார். இந்த தகவலை அங்கிருந்த மக்கள் அன்னதானப்பட்டிபோலீசுக்கு கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்கடர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பிணத்தை கைப்பற்றிவிசாரணை செய்தார்.
இறந்துபோன முதியவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications