செத்துப்போன வாக்காளர்கள்
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்:
தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில் 297 பேர் "இறந்து விட்டதாக கூறி வாக்கு அளிக்கமறுக்கப்பட்டனர்.
தாராபுரம் அருகே சின்னப்புத்தூர், புளியமரத்துப்பட்டி, வேலூர் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் ஓட்டளிக்கும்வகையில் அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 297 வாக்காளர்களின்பெயர்களை எடுத்து விட்டனர்.
இதில், அவர்கள் இறந்து விட்டதாக கருதி அவர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள்ஓட்டளிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டி.எஸ்.பி குப்புசாமி தலைமையில் போலீசார் வந்துஅவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார்.












Click it and Unblock the Notifications