வேட்பாளர் ஜீப் எரிப்பு .. வைகோ கண்டனம்
சென்னை:
மதிமுக வேட்பாளர் ஜீப் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதி மதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத். வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது இவர் மீது சிலர் திடீர் தாக்குதலில் இறங்கினர். இதில் ரவீந்திர நாத்தின் ஜீப் தீவைத்துஎரிக்கப்பட்டது.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பவுஞ்சூர் வாக்குச்சாவடியில்மதிமுக சின்னமான பம்பரம் சின்னத்திற்கு எதிரே உள்ள நீல நிற பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என்றுவாக்காளர்கள் புகார் கூறியுள்ளனர். அதற்கு அந்த வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரி, வேறு ஏதாவது ஒரு பட்டனைஅழுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த வேட்பாளர் ரவீந்திர நாத், அங்கு சென்று தேர்தல் அதிகாரியிடம் பேசியுள்ளார். பின்னர்தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப் போவதாக கூறி விட்டு வெளியே வந்துள்ளார்.
வெளியே நின்று அவர் தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், தேர்தல் தோல்வி ஜூரத்தில் இருந்தஆளுங்கட்சித் தொண்டர்கள் ரவீந்திர நாத் மீது கொலை வெறித் தாக்குதலில் இறங்கினர்.
இதில் ரவீந்திர நாத்தின் ஜீப் எரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்டுத் தர்பாருக்கு மே 13-ம் தேதி முடிவு கட்டப்படும்.இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.