இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான்: ஜெயலலிதா
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளும் அதிக அளவு இடங்களைப் பெற்று வெற்றிபெற்றது எதிர்பார்த்ததுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தேர்தல் முடிவுகள் மிகவும் மகிழ்ச்சியடையும் வகையில்உள்ளது.
இந்த முடிவுகள் எதிர்பார்த்ததுதான். ஏனெனில் நான் தேர்தல் பிரச்சாரம் செய்த போது மக்கள் அனைவரும்அதிமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக ஓட்டுப் போடுவோம் என்று கூறினார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 5 ஆண்டுகளாகத் தடம் புரண்ட நிலையில் இருந்த தமிழகத்தை மீண்டும் சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்படும்.
குடிநீர்ப்பிரச்சனை மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையையும் சரி செய்ய வேண்டும். அதற்கான அனைத்துமுயற்சிகளையும் அதிமுக எடுக்கும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications