கேரளாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
திருவனந்தபுரம்:
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கிறது.
கேரளாவில் கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் நேரடி மோதலில் காங்கிரஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக இருந்த அதிருப்தி,இம்முறை காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளது.
இந்த மாநிலத்தில் எப்போதுமே கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மாறி மாறி அமைவதுண்டு. இந்தவகையில் கம்யூனிஸ்ட்டிற்கு அடுத்தபடியாக ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த மாநிலத்தில் உள்ள 140 சட்டசபைத் தொகுதிகளில் இதுவரை 131 தொகுதிகளின் முடிவுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இடதுசாரி முன்னணி 36 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 101இடங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது. எனவே கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications