ஜெ.யை முதல்வராக பதவியேற்க கவர்னர் அழைக்க வேண்டும்: சேஷன்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஜெயலலிதாவை முதல்வராகப்பதவியேற்க அழைப்பதைத் தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்சேஷன் தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாதவாறு அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தவறானமுடிவாகும்.
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தால் அவர் தேர்தலில் போட்டியிடலாம்.
இதை மீறி ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது அதையும் மீறி அதிமுக கூட்டணி196 இடங்களைப் பெற்றுள்ளது.
இப்போது ஜெயலலிதாவை முதல்வராக அழைப்பதைத் தவிர கவர்னருக்கு வேறு வழியில்லை. ஜெயலலிதா தமிழகமுதல்வராகப் பதவியேற்றபின் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் ஊர்ஜிதம் செய்யப்பட்டால் அவரதுபதவியைப் பறிக்க வேண்டும். இதுதான் முறை என்றார் சேஷன்.