அமைச்சர் ஆவாரா தமிழ்க்குடிமகன்?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவை விரிவாக்கத்தை 19-ம் தேதி வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான 5 பேர் அமைச்சரவை முதல் கட்டமாக பொறுப்பேற்றுள்ளது.ராஜ்பவனில் நடந்த திடீர் பதவியேற்பு விழாவில் எளிமையான நிகழ்ச்சியில் இவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள்.
தற்போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஜெயலலிதா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர்கள்குறித்த பட்டியலை அவர் தயாரித்து வருகிறார். மொத்தம் 19 பேர் வரை அமைச்சரவையில் இருப்பார்கள் என்றுதெரிகிறது.
அதற்கு மேல் எண்ணிக்கை போகாமல் பார்த்துக் கொள்ளவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார் என்றுகூறப்படுகிறது.
தமிழ்க்குடிமகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அதேபோல,திமுகவின் தீவிர பேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம், தாமரைக்கனியின் மகன் இன்பத் தமிழன்ஆகியோரின் பெயர்களும் அமைச்சர்கள் பட்டியலில் அடிபடுகிறது.
முன்னாள் அமைச்சர் கண்ணப்பனைத் தோற்கடித்த நடராஜன், சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனைத்தோற்கடித்த வளர்மதி ஜெபராஜ், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனைத் தோற்கடித்த வளர்மதிஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது.
18-ம் தேதிக்குள் தனது அமைச்சர் பட்டியலை ஜெயலலிதா தயார் செய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications