இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள புஷ் விருப்பம்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர் நோக்கியிருப்பதாக கூறியுள்ளார்.
சென்ற மாதம் கிளின்டனுக்கு பின் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜார்ஜ் வில்லியம் புஷ்ஷைஇந்தியாவிற்கு வருமாறு பிரதமர் வாஜ்பாய் அழைப்பு விடுத்திருந்தார். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
பிரதமர் புஷ்ஷை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்த கடிதத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் அமெரிக்கா சென்றிருந்த போது புஷ்ஷை சந்தித்து கொடுத்தார்.
புஷ் தனது ஒப்புதல் கடிதத்தை அமெரிக்காவின் துணை செயலாளர் ரிச்சரட் அர்மிடேஜ் மூலம் வாஜ்பாயுக்குஅனுப்பி வைத்தார்.
இன்னும் புஷ்ஷின் இந்திய சுற்றுப் பயணத்திற்கான தேதிகள் முடிவு செய்யப்படவில்லை.
ஆசிய மரபுரிமை மாதம் வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்டது தொடர்பாக அமெரிக்காவில் இருக்கும்இரண்டு இந்திய தலைவர்களான ஸ்வதேஷ் சாட்டர்ஜி மற்றும் துர்கா அகர்வால் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்ததது.
அவர்களிடம் புஷ் கூறுகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானுக்கும், தென் கொரியாவிற்கும்சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறேன். இந்திய சுற்றுப்பயணத்தை மிக ஆவலுடன் எதிர் நோக்கியருக்கிறேன்.தேதிகள் மட்டும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றார்
இது குறித்து சாட்டர்ஜி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா அமெரிக்காவிற்குகம்ப்யூட்டர் வல்லுனர்களை கொடுத்தற்காகவும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அமெரிக்காவின்பொருளாரத்திற்கு ஆற்றிய சேவையையும் பெரிதும் பாராட்டினார் என்றார்.
யு.என்.ஐ.