இலங்கையில் கைதான 39 தமிழக மீனவர்களை மீட்க முயற்சி
கொழும்பு:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 39 தமிழக மீனவர்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.
தூத்துக்குடி, ஜகதாபட்டினம், ராமநாதபுரம் கடற்பகுதிகளில் மீன் பிடித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 39 மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 31 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். 8 பேர் சென்ற மாதம் 18ம் தேதி கைது செயய்யப்பட்டனர். 8 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது அவர்களுக்கு உதவ இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்திய தூதரகத்தின் 2 மூத்த அதிகாரிகள் யாழ்பாணம் சிறையில் இருக்கும் மீனவர்களின் நிலையை கேட்டறிந்தனர். அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக அவர்களிடம் உறுதியளித்தனர்.
சிறை அதிகாரிகளிடம் மீனவர்களுக்கு எந்த விதமான துன்புறுத்தலும் கொடுக்காமல் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
இலங்கை கடற்பகுதியில் பல விதமான மீன்கள் கிடைப்பதால் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடிப்பதால், இலங்கை கடற்பகுதிக்குள் அத்து மீறி நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுவதும் வழக்கமாக நடப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.