தொண்டர்கள் தற்கொலை: கருணாநிதி வேதனை
சென்னை:
தேர்தலில் தி.மு.க.தோல்வியடைந்ததால் தி.மு.க. தொண்டர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தனக்குமிகவும் வருத்தமளிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்ததால் மனம் உடைந்த 2 தி.மு.க. தொண்டர்கள்தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்
இது தனக்கு வருத்தமளிப்பதாக தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி இரண்டையும் எதிர்பார்த்து ஏற்க வேண்டும். வெற்றி பெற்றால் மகிழ்வதும்,தோல்வியடைந்தால் துவள்வதும் கூடாது.
தி.மு.க. வெற்றி பெறவில்லை என்பதற்காக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொண்டர் முத்துவும், கோயம்புத்தூர்மாவட்டம் பொள்ளாச்சியில் நாகராஜனும் தீக்குளித்து தங்களை தாங்களே மாய்த்துக் கொண்டது எனக்கு மிக்கவருத்தத்தை அளிக்கிறது.
இது போன்ற செயல்களில் இனியும் தொடரக் கூடாது என தி.மு.கவினரை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் எனகூறியுள்ளார்.