For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கத்திரிக்கு இன்று கத்திரி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கத்திரி வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் சென்னை வாசிகளுக்கு திடீர் சந்தோஷமாக வியாழக்கிழமை காலைமுதலே வானம் மப்பும், மந்தாரமுமாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. கூடவே அக்னிநட்சத்திரம் சேர்ந்து கொண்டதால், மக்கள் படும் அவதியைச் சொல்லி மாளாது. குறிப்பாக சென்னை நகரம்கடுமையான வெப்ப அலையில் சிக்கித் தவிக்கிறது.

இந்த நிலையில், சென்னைை நகரில் வியாழக்கிழமை காலை முதலே வெயில் அதிகமாக இல்லை. வழக்கமாககாலை 6 மணிக்கெல்லாம் சுள்ளென்று வெயில் அடிக்கும். ஆனால் வியாழக்கிழமை காலை 8 மணிக்குத்தான்வெயிலே வந்தது.

பலத்த காற்றும், மேக மூட்டமும் நகர் முழுவதும் உள்ளது. வெயில் கொடுமை நீங்கிய நிலையில, மழைவருவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை நல்ல மழை பெய்தது. தொடர்ந்து அங்கு மேகமூட்டமாக இருப்பதால் வியாழக்கிழமையும் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த மழை காரணமாக திருவண்ணாமலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.கோடை விவசாய நடவுக்கு இந்த மழை பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன்உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X