பா.ம.க. சட்டசபை தலைவராக ஜி.கே.மணி தேர்வு
திண்டிவனம்:
புதன்கிழமை நடந்த பா.ம.க. செயற்குழு கூட்டத்தில், புதிய சட்டசபையின் பா.ம.க. தலைவராக ஜி.கே. மணிதேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக ஐ. கணேசனும், கட்சியின் கொறடாவாக ஜெ.குருவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
நாம் வெற்றிக் களிப்பில் இருக்க வேண்டிய நேரமில்லை இது. நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம்உள்ளது. அதை நினைத்துச் செயல்பட வேண்டும்.
நாம் பெற்ற இந்த பெரிய வெற்றி பலருக்கு ஆச்சரியத்தையும், பலருக்கு எரிச்சலையும், இன்னும் பலருக்குசந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.
நம் கட்சிக்கு 5 எம்.பி., 20 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அரசியல் பற்றித் தெரிந்தவர்கள்நம்மைச் சாதாரணமாக எடைபோட மாட்டார்கள். நம்முடைய அபரிமிதமான வளர்ச்சியை எண்ணிப்பெருமைப்பட வேண்டும்.
விரைவில் 20 எம்.எல்.ஏ.க்களுக்கும் 2 நாள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications