ஜெ. வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி விலகல்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கைவிசாரித்து வந்த போலீஸ் எஸ்.பி. நல்லம நாயுடு திடீரென விசாரணையிலிருந்து தான் விலகிக் கொள்வதாககூறியுள்ளார்.
ஜெயலலிதா மீது திமுக ஆட்சிக்காலத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டன. அனைத்து வழக்குகளும் தனிநீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன.
இதில் கலர் டிவி வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு விட்டார். கொடைக்கானல்ஹோட்டல் வழக்கில் 1 ஆண்டு தண்டனையும், டான்சி நில பேர வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனையும்விதிக்கப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு மற்றும் நிலக்கரி பேர ஊழல் விசாரணை நடந்துவருகிறது.
வருமானத்துக்கு மீறிய வகையில் ரூ. 66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த வழக்கை எஸ்.பி. நல்லம நாயுடுவிசாரித்து வந்தார். இந்த வழக்கில், தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில், விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நல்லம நாயுடு கூறியுள்ளார். அவரதுவிலகலுக்கு ஆட்சி மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தனது விலகலுக்கு உடல் நிலைசரியில்லாமையே காரணம் என்று நல்லமநாயுடு கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜெயலலிதா மீதான வழக்குகளில் ஆஜராகி வந்த அரசு வக்கீல்கள்சோமசுந்தரம், வெங்கடரமணன் ஆகியோர் விலகி விட்டனர். தற்போது நல்லம நாயுடுவும் விலகி விட்டார்.












Click it and Unblock the Notifications