புதுவையில் காங்.ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு
சென்னை:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய அதிமுக நிபந்தனையற்ற ஆதரவுதெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 11 இடங்களைகாங்கிரஸ் கட்சி பெற்றது.
காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2 இடங்களைப் பெற்றது.புதுவையில் எந்தக் கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் யாராலும் தனித்து ஆட்சியமைக்கமுடியவில்லை.
இந்நிலையில் அதிமுக ஆதரவைப் பெற்று புதுவையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் முயற்சித்தது.
இதையடுத்து காங்கிரஸ் மேலிடத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவைசந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு புதன்கிழமை மாலை சுமார் அரை மணி நேரம் நடந்தது.
பேச்சுவார்த்தையின் போது புதுவையில் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவுஅளிப்பதாக ஜெயலலிதா உறுதி அளித்தார். அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து இன்னும் முடிவுஎதுவும் எடுக்கப்படவில்லை.
யு. என்.ஐ.












Click it and Unblock the Notifications