புலிகள் இருப்பிடத்துக்கு செல்கிறார் எரிக்சோல்ஹெம்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசுவதற்காக முயற்சி செய்து வரும் நார்வேதூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் வியாழக்கிழமை பிற்பகல் அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குசென்றுள்ளார்.
புலிகள் இருப்பிடத்துக்குச் செல்லும் எரிக் சோல்ஹெம் அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கும்படிகூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு வந்துள்ள சோல்ஹெம் வியாழக்கிழமை புலிகள் தங்கியிருக்கும் இடமான வன்னி மாவட்டம் மாலவிபகுதிக்குச் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சோல்ஹெம் செவ்வாய்க்கிழமை மாலை இலங்கை தலைநகர் கொழும்பு வந்தார். அப்போது அதிபர்சந்திரிகா குமாரதுங்கா, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் மற்றும் இலங்கைஎதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.