கொளுத்தும் வெயிலுக்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே வெயில் கொடுமைக்கு 2 பேர் பலியாகினர்.
சென்னையில் வெயில் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் 5நாட்கள் இருப்பதால், வெயில் கடுமையாக அடித்து வருகிறது. பகல் நேரங்களில் ஆள் நடமாட்டம் வெகுகுறைவாக இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை அருகே மாதவரம் மற்றும் மணலி பகுதிகளில் வெயில் கொடுமைக்கு 2 பேர் இறந்தனர்.
மாதவரம் பால் பண்ணை பகுதியில் உள்ள பன்னீர் செல்வம் என்ற 45 வயது நபர், சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கடுமையான வெயிலுக்கு மயங்கி விழுந்து இறந்தார்.
இதேபோல, மணலி பாரதி தெருவைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் வெயிலுக்கு மயங்கி விழுந்து இறந்தார்.












Click it and Unblock the Notifications