வெயிலுக்கு இதமாக ...
வாட்டர் பாக்கெட்
சென்னையில் சர்வசாதரணமாக வாட்டர் பாக்கெட் புழக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் சிறுவர்,சிறுமியர் கையில் வாளி, அதில் ஐஸ் கட்டிகள், அதற்குள் சிறு வாட்டர் பாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டுவிற்றுக் கொண்டு இருப்பர். அதன் விலை ஒரு ரூபாய்தான். வாங்கி, உடைத்து வாயில் போட்டுக் கொண்டால் நாவறட்சி போச்சு!.
மின்சார ரயில்களிலும் இந்த வாட்டர் பாக்கெட் விற்பனை அதிகமாக உள்ளது. பஸ்சை விட ரயிலில்தான் வெயிலின்வெம்மை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த வாட்டர் பாக்கெட் விற்பனை சூப்பர் சானிக் வேகத்தில் உள்ளது.சென்னையிலேயே இந்த வாட்டர் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. சாதாரண தண்ணீராகஇல்லாமல் மினரல் வாட்டராக இருப்பதால் ஆரோக்கியத்திற்கும் கேடு இல்லை.
கையில் தண்ணீர் பாட்டிலைத் தூக்கிக் கொண்டு போகாமல், அவ்வப்போது வாங்கி வாயில் ஊற்றிக் கொள்ளும்வசதியை யார்தான் வேண்டாம் என்பார்கள்?
தர்பூஸ், வெள்ளரி
தர்பூஸ் பழங்கள் மற்றும் வெள்ளரிக் காய் விற்பனையும் சென்னையில் சூடு பிடித்துள்ளது. சாலையோரங்களில்தர்பூஸ் மலைகளைப் பார்த்திருக்கலாம். நல்ல சுவையுடன், தண்ணீர்ச் சத்து நிறைந்த தர்பூஸை வாங்கி சாப்பிட்டால்,வெயிலில் உலர்ந்த நாக்குக்கு கொஞ்சம் உயிர் வரும்.
உலர்ந்து, சுருங்கிக் கிடக்கும் குடல் கொஞ்சம் எழுந்து நிற்கும். தர்பூஸுக்கு சமமமான சத்தைக் கொண்டதுவெள்ளரி. பிற ஊர்களைப் போல் அல்லாது குட்டை வெள்ளரிக்குப் பதில் இங்கு புடலங்காய் சைசில் நீளமானவெள்ளரிக் காய்கள் கிடைக்கும். நல்ல சுவையாகவும், தண்ணீர்ச் சத்து உள்ளதாகவும் வெள்ளரிக் காய்கள் உள்ளன.
ஐஸ் மோர், லஸ்ஸி
கையில் காசு கொஞ்சம் கம்மியாக இருந்தால் ஐஸ் மோர் சாப்பிடலாம். பிளாட்பாரங்கள் பூராவும் ஐஸ் மோர்கடைகளைப் பார்க்கலாம். விலை அதிகமில்லை ரூ. 2.50 தான். ஜில்லென்று, ஒரு டம்ளர் மோர் வாங்கிச்சாப்பிட்டால், உடலுக்கு ஜிலுஜிலுவென்று இருக்கும்.
மோர் உடலக்கும் நல்லது. மோரைப் போலவே லஸ்ஸியும் உடலுக்கு நல்லது. மோருக்கு சீனியரான தயிரைக்கடைந்து ஜீனியைக் கலந்து தயாரிக்கப்படும் லஸ்ஸி உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். லஸ்ஸி விலை கொஞ்சம்அதிகம். குறைந்தது ரூ. 6லிருந்து 10 வரை இருக்கும். ஆனால் ரூ. 15 கொடுத்து ஜூஸ் சாப்பிடயோசிப்பவர்களுக்கு இது சீப் அன்ட் பெஸ்ட் குளிர்பானம்.
பழச்சாறுகள்.
விதவிதமான பழச்சாறுக் கடைகள் எங்கு பார்த்தாலும் உள்ளன. ரூ. 10 லிருந்து ரூ. 20 வரை இந்த பழச்சாறுகளின்விலை உள்ளது.
சப்போட்டா, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, மாம்பழம் என விதவிதமான பழச்சாறுகள். வெயிலுக்கு மட்டுமல்லாது,உடலுக்கும் நல்லது. இந்தக் கடைகளுக்கு இப்போது நல்ல வருமானம். மழைக்குப் பயந்து பள்ளிக்குள்நுழையாதவர்கள் கூட வெயிலுக்குப் பயந்து இங்கு ஒதுங்கி வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.