For Daily Alerts
Just In
கொளுத்தும் வெயில் தொடர்கிறது
சென்னை:
சென்னையில் வெள்ளிக்கிழமையும் வழக்கம் போல வெயில் கொளுத்தியது.
வியாழக்கிழமை ஓரளவு வெயிலின் கொடுமை குறைந்திருந்தது. தென் மேற்குப் பருவ மழை பெய்யத்துவங்கியதையடுத்து வெயிலின் கொடுமை திடீரென குறைந்தது. இதனால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
வெள்ளிக்கிழமை நிலைமை மாறியது. வழக்கம் போல வெயில் கொளுத்தத் தொடங்கியது. நகர் முழுவதும்அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அவதியில் ஆழ்ந்தனர்.
வெள்ளிக்கிழமை சென்னையில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம்மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என்பதால் வெயிலின் கொடுமை இப்போதைக்குக் குறையாது என்றுதெரிகிறது.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]