கோவையில் ஆகஸ்டு மாதம் "அக்ரி இன்டெக்ஸ் 2001"

Subscribe to Oneindia Tamil

கோவை:

"அக்ரி இன்டெக்ஸ் 2001" என்ற சர்வதேச வேளாண் கண்காட்சி வரும் ஆகஸ்டு மாதம் கோவையில் நடக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ச. கண்ணையன் நிருபர்களிடம்தெரிவித்ததாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமும் இணைந்து இந்தக்கண்காட்சியை நடத்துகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு வேளாண் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்திமுடித்தது. இந்தக் கண்காட்சியை 3 லட்சம் பேர் கண்டு களித்தனர். இதன் மூலம் 50 கோடி ரூபாய் அளவுக்குவர்த்தகம் ஏற்பட்டது.

"அக்ரி இன்டெக்ஸ் 2000 என்ற அந்தக் கண்காட்சியின் வெற்றியையடுத்து இந்த ஆண்டும் "அக்ரி இன்டெக்ஸ்2001 என்ற கண்காட்சியை சர்வதேச அளவில் நடத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது .

வரும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு இந்தக் கண்காட்சி நடக்கும். இதற்கான ஏற்பாடுகளைதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கண்காட்சி வளாகத்தில் 400 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட விவசாயக்கருவிகள் உற்பத்தி செய்யும் பல இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

சர்வதேச அளவில் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மேம்பாடு, நவீன வளர்ச்சி, புதிய வேளாண்மையுக்திகள், ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் தவிர்க்கும் முறை, சிக்கன நீர்ப்பாசனம், ஒருங்கிணைந்தவிவசாயப் பயிர் பாதுகாப்பு போன்றவை குறித்த கண்காட்சிகள் இதில் இடம் பெறும்.

இக்கண்காட்சியில் தைவான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, இஸ்ரேல், நியூசிலாந்து, ஹாலந்து,பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கண்காட்சியைப்பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் கண்ணையன்.கோவை:

"அக்ரி இன்டெக்ஸ் 2001" என்ற சர்வதேச வேளாண் கண்காட்சி வரும் ஆகஸ்டு மாதம் கோவையில் நடக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ச. கண்ணையன் நிருபர்களிடம்தெரிவித்ததாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமும் இணைந்து இந்தக்கண்காட்சியை நடத்துகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு வேளாண் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்திமுடித்தது. இந்தக் கண்காட்சியை 3 லட்சம் பேர் கண்டு களித்தனர். இதன் மூலம் 50 கோடி ரூபாய் அளவுக்குவர்த்தகம் ஏற்பட்டது.

"அக்ரி இன்டெக்ஸ் 2000 என்ற அந்தக் கண்காட்சியின் வெற்றியையடுத்து இந்த ஆண்டும் "அக்ரி இன்டெக்ஸ்2001 என்ற கண்காட்சியை சர்வதேச அளவில் நடத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது .

வரும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு இந்தக் கண்காட்சி நடக்கும். இதற்கான ஏற்பாடுகளைதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கண்காட்சி வளாகத்தில் 400 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட விவசாயக்கருவிகள் உற்பத்தி செய்யும் பல இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

சர்வதேச அளவில் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மேம்பாடு, நவீன வளர்ச்சி, புதிய வேளாண்மையுக்திகள், ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் தவிர்க்கும் முறை, சிக்கன நீர்ப்பாசனம், ஒருங்கிணைந்தவிவசாயப் பயிர் பாதுகாப்பு போன்றவை குறித்த கண்காட்சிகள் இதில் இடம் பெறும்.

இக்கண்காட்சியில் தைவான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, இஸ்ரேல், நியூசிலாந்து, ஹாலந்து,பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கண்காட்சியைப்பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் கண்ணையன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+