எதிர்க்கட்சித் தலைவராகிறார் அன்பழகன்
சென்னை:
சட்டசபை திமுக தலைவராக திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.துணைத் தலைவராக ஆற்காடு வீராசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 28 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைஅடைந்துள்ளது. இதையடுத்து சட்டசபை திமுக தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம்சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.
திமுக தலைவர் கருணாநிதி கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்சட்டசபை திமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளர் ஆற்காடு வீராசாமி துணைத் தலைவராகதேர்வு செய்யப்பட்டார். கொறடாவாக இள.புகழேந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டசபைக் கட்சித் தலைவராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவராகிறார்அன்பழகன்.
இந்தக் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும்,முன்னாள் துணை சபாநாயகருமான பரிதி இளம்வழுதி, கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அவர்மட்டும் கலந்து கொள்ளவில்லை.