சாதி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு: திருநாவுக்கரசு
கோவை:
அரசியல் கட்சிகள் நிறுத்தும் சாதி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்கின்றனர். ஆனால், சாதிக் கட்சிகளை அவர்கள்ஏற்கவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கியுள்ளன என்று எம்ஜிஆர் அதிமுக பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுக அணியின் தோல்விக்கு அரசு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமல்ல. அதிமுக அணியில் சேர்ந்த அரசியல்கட்சிகள் கொண்டிருந்த ஓட்டு வங்கிதான் காரணம்.
அரசியல் கட்சிகள் நிறுத்தும் சாதி வேட்பாளர்களை மக்கள் ஆதரித்துள்ளனர். ஆனால், சாதி அடிப்படையிலானகட்சியை எதிர்த்துள்ளனர்.
அதிமுக அணியில் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி மூலம்தான் ஜெயலலிதாவிற்கு வெற்றி கிடைத்துள்ளது.
மீண்டும் மீண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு பதவியில் நீடிக்கலாம் எனஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு நடந்தால் அது ஜனநாயக் கேலிக் கூத்தாகி விடும்.
திமுக அணியிலிருந்து மதிமுக பிரியாமல் இருந்திருந்தால், திமுக அணிக்கு இன்னும் கூடுதலான இடங்கள்கிடைத்திருக்கும் என்றார் திருநாவுக்கரசு.












Click it and Unblock the Notifications