For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.ஏ.எஸ். தேர்வு: 4 தமிழக மாணவர்கள் சாதனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அண்ணாநகரில் தமிழக அரசால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மையத்தில் படித்த 4 பேர்2000ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சாத்தூரைச் சேர்ந்த டாக்டர் பி. உமாநாத் (26), சிவில் சர்வீஸஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 17ஆவதுஇடத்தைப் பிடித்துள்ளார். இவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் பீரக்குப்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில்டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.

மதுரையைச் சேர்ந்த டாக்டர் ஆர். மீனாட்சிசுந்தரம் (27), அகில இந்திய அளவில் 20 ஆவது இடத்தைப்பெற்றுள்ளார். கால்நடை மருத்துவரான இவர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சியாளராகஇருந்து வருகிறார்.

ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ஆர். செல்வம் (29), 74 ஆவது இடத்தில் இருக்கிறார். வேளாண்மையில் முதுகலைமுடித்துள்ள இவர், ஏற்கனவே ஐ.ஆர்.எஸ். எழுதி வெற்றி பெற்றுள்ளார். தற்போது பரோடாவில் பயிற்சி பெற்றுவருகிறார்.

தென்காசியில் ஆர்.டி.ஓ.-வாகப் பணிபுரிந்து வரும் டாக்டர் அன்பழகன், சிவில் சர்வீஸஸ் தேர்வில் 79ஆவது ரேங்க்வாங்கியுள்ளார். இவர் கால்நடை மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

ஐ.பி.எஸ்.: இதே மையத்தில் படித்த மேலும் 2 பேர் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த எம்.எஸ்ஸி. பட்டதாரியான பி.எஸ். முபாரக் (27), சிவில்சர்வீஸஸ் தேர்வில் 198ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுவழக்கறிஞர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

சிவில் சர்வீஸஸ் தேர்வில் 238ஆவது ரேங்க் பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த கிளமண்ட் ரமேஷ் குமார் (27).பி.டெக். படித்துள்ள இவர், ஐ.எப்.எஸ். பணியில் சேர வேண்டும் என்பதற்காக அசோக் லேலண்டு கம்பெனிவேலையை உதறியவர்.

ஐ.ஆர்.எஸ்.:இவர்கள் தவிர, இம்மையத்தில் படித்த மேலும் 17 பேர் ஐ.ஆர்.எஸ். தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர்.இவர்கள் இந்திய வருவாய்த்துறை பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X