பாண்டி: நாராயணசாமி முதல்வராவாரா?
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வராக அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புஅதிகரித்துள்ளது.
பாண்டிச்சேரியில் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ்ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டியிடுவதால்ஆட்சியமைக்கும் முயற்சி தடைபட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் மேலிடம் இரண்டு பேரை அனுப்பியது. அப்படியும்முதல்வர் தேர்வு முடிந்தபாடில்லை.
இந்த நிலையில், முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைத்துகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு டெல்லியில்தான் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications