நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
சென்னை:
தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படும் அமைச்சர்கள் சனிக்கிழமை காலை பதவியேற்கின்றனர்.
ஜெயலலிதா தலைமையிலான புதிய தமிழக அமைச்சரவை மே 14-ம் தேதி பதவியேற்றது. அப்போதுஜெயலலிதாவுடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர். தற்போது அமைச்சரவை விரிவுபடுத்தப்படவுள்ளது.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சர்களுக்குஆளுநர் மாளிகையில், ஆளுநர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
அமைச்சர்கள் பதவியேற்புக்குப் பின் காலை 11.30 மணியளவில் தற்காலிக சபாநாயகராக இந்திய தேசிய லீக்கட்சியின் அப்துல் லத்தீபுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
22-ம் தேதி புதிய சட்டசபையின் முதல் கூட்டம் துவங்குகிறது. அன்று புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக்கொள்கிறார்கள். தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். 23-ம் தேதிசபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும். 24-ம் தேதி சபாநாயகர், துணைசபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
25-ம் தேதி புதிய சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார். அதன் பின் வழக்கம் போல சபைநடவடிக்கைகள் துவங்கும்.












Click it and Unblock the Notifications