நான் நிரபராதி என்கிறார் பரிதி இளம்வழுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அ.தி.மு.க ஏஜென்டை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.பரிதி இளம் வழுதி நான்நிரபராதி, அரசியில் ரீதியாக என் மீது வழக்கு போட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் இந்த மாதம் 10ம் தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. பூத் ஏஜென்டைதாக்கியதாக கூறி, தி.மு.கவைச் சேர்ந்தவரும் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏவும், தி.மு.க. ஆட்சியில் சட்டசபை துணைசபாநாயகராக இருந்தவருமான பரிதி இளம் வழுதி வியாழக்கிழமை கைது செய்யப்ட்டார்.

மாஜிஸ்டிரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் கூறுகையில், இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த விதமானசம்பந்தமும் கிடையாது. நான் நிரபராதி. அரசியல் ரீதியாக என்னையும், என் ஆதரவாளர்களையும் பழி வாங்கும்நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நான் இன்னமும் துணை சபாநாயகராகத்தான் இருக்கிறேன். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில்நான் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றிருக்கிறேன். இன்னமும் பொறுப்பு கூட ஏற்கவில்லை என்றார்.

வேலூர் சிறையில் அடைக்கப்படுவதற்காக அவர் வேனில் ஏற்றப்பட்டபோது, அரசியல் அராஜக செயல் காரணமாகஎன் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது என கோபமாக கூறினார் பரிதி இளம்வழுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+