ரயில்வே நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் வெளியேற்றம்
சென்னை:
சென்னை வேளச்சேரியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை போலீஸார்அப்புறப்படுத்தினர்.
சென்னை வேளச்சேரி அருகே மாடி ரயில் போக்குவரத்துக்கான பாலம் கட்டப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் முதல்வேளச்சேரி வரையிலான மாடி ரயிலுக்கான பாலம் இது. முடிவுறும் நிலையில் இந்த கட்டுமானப் பணிகள்உள்ளன.
ரயில் பாலம் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு அருகே ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. வெறும்நிலமாக கிடக்கும் இப்பகுதியில் குடிசைவாசிகள் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு அரசு இடம் ஒதுக்கித் தரப்போவதாக வியாழக்கிழமை செய்தி பரவியது.
இதையடுத்து உதயம் நகர், திருவள்ளுவர் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர்அந்தப் பகுதிக்கு படையெடுத்து வந்தனர்.
கையில் கட்டைகளுடன் வந்த அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடத்தை முற்றுகையிட்டு கட்டைகளை ஊன்றிரிசர்வ் செய்து கொள்ளத் தொடங்கினர். பரந்து விரிந்த ரயில்வே நிலத்தில் திடீரென நூற்றுக்கணக்கான மக்கள்கட்டைகளை ஊன்றி நிலத்தைப் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அப்பகுதிக்கு போலீஸார் விரைந்து வந்தனர். ரயில்வே நிலம் யாருக்கும்ஒதுக்கித் தரப்பட மாட்டாது என்றும், பட்டா தரப் போவதாக வெளியான செய்தி தவறானது, வெறும் வதந்தி என்றுவிளக்கி ஆக்கிரமிப்பு செய்திருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கைக்குக் கிடைத்தது வாய்க்கு கிடைக்காமல் போன வருத்தத்தோடு மக்கள் புலம்பியவாறே கொண்டு வந்தகட்டைகளுடன் தங்களது ஒரிஜினல் குடிசைகளுக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications