For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அக்னி நட்சத்திர" வெயிலுக்கு 50 ஆயிரம் மீன்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

அக்னி நட்சத்திர வெயிலின் கோரப்பிடிக்கு தண்ணீரிலேயே இருக்கும் மீன்களும் இரையாகிக்கொண்டிருக்கின்றன.

சூலூருக்கு அருகே உள்ள பெரியகுளத்தில் உள்ள ஒரு குளத்தில், கொளுத்தும் வெயிலுக்கு ஆயிரக்கணக்கானமீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இக்குளத்தில் இருந்த ஜிலேபி வகை மீன்கள் மட்டும் இறந்து கரை ஒதுங்கத் துவங்கின. இறந்த மீன்களின்எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

கடந்த ஒரு வாரமாகவே அதிக அளவில் இங்கு வெயில் அடித்து வந்தது. இதுதான் மீன்கள் இறப்புக்குக் காரணம்என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் மீன்கள் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தண்ணீரின் அளவு குறைந்து, மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதும் மீன்கள் இறப்புக்குக் காரணமாகக்கூறப்படுகிறது.

இறந்த மீன்களையும் தண்ணீரையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்என்று சூலூர் பேரூராட்சித் தலைவர் தங்கவேலு கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X