நல்ல எதிர்க்கட்சியாக இருப்போம்: சிதம்பரம்
சென்னை:
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்து நல்ல முறையில் பணியாற்றுவோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை தலைவர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் மிகவும் அமைதியாகவும், நேர்மையாகவும் சட்டசபைத் தேர்தல் நடந்தது. மக்கள் வழங்கிய தீர்ப்பைமதிக்கிறோம்.
தேர்தல் நல்ல முறையில் நடந்து முடிந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமாகாஜனநாயகப் பேரவைக்கு தோல்வி என்று நாங்கள் நினைக்கவில்லை.
மாநிலம் முழுவதும் தமாகா ஜனநாயகப் பேரவை உறுப்பினர்களை உருவாக்கி தமிழக நலனுக்காகப் பாடுபடுவதேஎங்களது குறிக்கோள்.
தமிழகம் முழுவதும் நானும், தமாகா ஜனநாயகப் பேரவையின் முக்கியத் தோழர்களும் சுற்றுப்பயணம்மேற்கொண்டு மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணிகளைச் செய்வோம் என்று தனது அறிக்கையில்கூறியுள்ளார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications