கோவை அருகே வங்கியில் கம்ப்யூட்டர்கள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே ஒரு வங்கியை உடைத்து 6 கம்ப்யூட்டர்களைக் கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார்தேடி வருகின்றனர். இந்தக் கொள்ளை முயற்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.
கோவை அருகே உள்ள சுந்தராபுரத்தில் போத்தனூர் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நேற்று கடந்த 20ம் தேதிஇரவு ஒரு கொள்ளைக் கும்பல் உள்ளே புகுந்தது. இந்த கும்பல் நகைப் பெட்டி லாக்கரை உடைத்து நகைகளைத்திருட உள்ளே புகுந்தது. ஆனால், அவர்களால் லாக்கரை உடைக்க மு டியவில்லை.
இதையடுத்து அவர்கள், அங்கிருந்த 6 கம்ப்யூட்டர்களைத் திருடிச் சென்றனர். இந்த கம்ப்யூட்டர் திருட்டால் இன்றுஅந்த வங்கியில் பணிகள் மிகவும் பாதிப்படைந்தது. திருடு போன கம்ப்யூட்டர்களின் மதிப்பு ரூ. 2 லட்ச ரூபாய்ஆகும்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications