நுழைவுத் தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவம், பொறியியல், விவசாயம் ஆகிய தொழிற் கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் நடந்தது.
இந்தத் தேர்வுகளின் முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்வை நடத்திய அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் வெளியிடுவதைத் திடீரென தள்ளிவைத்து விட்டது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.
முடிவுகள் வெளியிடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications