ஜெ.வுடன் பாண்டி. முதல்வர் சந்திப்பு
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திங்கள்கிழமை காலை அவரதுபோயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் உதவியுடன்ஆட்சியமைக்கவுள்ளது. தற்போதைய முதல்வர் சண்முகமே, மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
காங்கிரஸ், த.மா.கா கூட்டணி அமைச்சரவையில் அ.தி.மு.கவையும் சேர்க்க முதலவர் சண்முகம்விரும்புகிறார். இதுதொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவைசந்திக்க திங்கள்கிழமை காலை சென்னை வந்தார்.
போயஸ் தோட்டத்திற்குச் சென்ற அவர் அங்கு ஜெயலலிதாவைச் சந்தித்தார். பின்னர் காங்கிரஸ் கூட்டணிஅமைச்சரவையில் அ.தி.மு.கவும் சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சண்முகத்தின் கோரிக்கையைஜெயலலிதா கேட்டுக் கொண்டார். உறுதி எதுவும் கொடுத்தாரா என்பது குறித்துத் தெரியவில்லை.
பாண்டி. முதல்வர் சண்முகம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் முப்பனாரையும் சந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications