For Daily Alerts
Just In
12ஆவது சட்டசபை இன்று கூடுகிறது... பலத்த பாதுகாப்பு
சென்னை:
தமிழகத்தின் 12ஆவது சட்டசபை செவ்வாய்க்கிழமை கூடுவதையொட்டி சட்டசபை அமைந்துள்ள பகுதியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மே 10ஆம் தேதி தேர்தலுக்குப் பின் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை காலை தமிழக சட்டசபை கூடுகிறது. முதல்நாளன்று புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர்.
தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப் புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.இக்கூட்டத் தொடர் 31-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
சட்டசபை கூடுவதையொட்டி சட்டசபை வளாகம் அமைந்துள்ள கோட்டைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீஸ் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஊர்வலம், பொதுக்கூட்டம்போன்றவை அப்பகுதியில் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, May 22, 2001, 5:30 [IST]