"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் உதயம்
ஈரோடு:
ஈரோட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் மக்கள் திலகம் எம்ஜிஆர் முன்னற்றக் கழகம் என்ற புதியகட்சியைத் தொடங்கினார்.
ஈரோடு மாவட்டம், வெள்ளகோயில் தொகுதியில் அதிமுகவில் தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாகவும், அதிமுகஅமைச்சரவையில் இடம் பெற்றவர் துரை ராமசாமி. இவர் கடந்த 1977ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரைதொடர்ந்து வெள்ளகோயில் தொகுயில் வெற்றி பெற்றவர்.
இந்த முறை அவர் தேர்தலில் நிற்க அதிமுக சீட் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர், அதிமுகபோட்டிக் கூட்டத்தைக் கூட்டினார். தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இவர் தனித்துப் போட்டியிட்டதால்,அதிமுக இந்த தொகுதியில் தோல்வியடைந்தது. திமுக வேட்பாளர் வெறும் 416 ஓட்டுக்களில் வெற்றி பெற்றார்.
தேர்தல் சமயத்தில் இவருக்கு ஜெயலலிதா, செங்கோட்டையனைத் தூது அனுப்பியும் சமாதானம் அடையவில்லை.சுயேச்சையாக நின்று தோல்விகண்ட துரை ராமசாமி, இப்போது புதுக் கட்சி தொடங்கியுள்ளார். மக்கள் திலகம்எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம் என்ற இக்கட்சியை துவங்கி, அதில் தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளாகநியமித்துள்ளார்.