ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வசித்து வந்தவர் விஜயகுமார் (39). இவருக்கு மனைவியும், இரு மகள்களும்உள்ளனர்.
விஜயகுமார், மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். சமீபத்தில் இவரது சில மாடுகள் இறந்துவிட்டன, சில மாடுகள் காணாமல் போய் விட்டன. இதனால் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, கடனில்மூழ்கினார் விஜயகுமார்.
மனம் உடைந்த விஜயகுமார், கடனிலிருந்து மீளும் வழி தெரியாமல், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளமுடிவு செய்தார். இதையடுத்து குடும்பத்தோடு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications