கர்நாடகா-கோவாவில் புயல்
பனாஜி:
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் காரணமாக ஏற்பட்ட புயல் கோவா வழியே 300கிலோமீட்டர் வேகத்தில் வியாழக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
புயல் கர்நாடா - கோவா வழியே கரையைக் கடக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய வானிலைத்துறை இயக்குநர் ஆர்.பாஜ்பாய் கூறியதாவது:
அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் வடக்கு நோக்கி 14. 3 டிகிரியிலும், கிழக்குநோக்கி 71.6 டிகிரியிலும் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் வியாழக்கிழமை முற்பகல் கர்நாடாகா- கோவா வழியே கரையைக் கடக்கிறது. இதனால்கர்நாடகத்தில் வியாழக்கிழமை ரத்னகிரி, கார்வாரில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தால் வீடுகள், மரங்கள்,மின்கம்பங்கள் ஆகியவற்றுக்கு பலத்த சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவா, கொங்கன், கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடியமழையோ இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
மீனவர்கள் யாரும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு, போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தீயணைப்பு மற்றும் அவசரநடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு கன்ட்ரோல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் கரையைக் கடப்பது பற்றியும், கரையைக் கடந்ததும்ஏற்படும் சேதம் குறித்தும் உடனுக்குடன் தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கன்ட்ரோல் அறைகள்அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
இதுகுறித்து கோவா அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,
புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளியுடன் கூடிய காற்றும், பலத்த மழையும் பெய்யக் கூடும். இதனால்பொதுமக்கள் அனைவரும், வீட்டு உபயோகப் பொருட்களான மண்ணெண்ணெய், உணவு பொருட்கள்ஆகியவற்றை முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. கடலோரப் பகுதிகளில்வாழ்பவர்கள் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.