நுழைவுத் தேர்வில் கோவை மாணவர் 3 வது இடம்
கோவை:
பெற்றோர் கொடுத்த ஊக்கமே நுழைவுத் தேர்வில் 3 வது இடம் பிடிக்க முடிந்தது என கோவையைச் சேர்ந்தசந்திரசேகர் தெரிவித்தார்.
இன்ஜினியரிங் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் கோவை ரேஸ்கோர்சைச் சேர்ந்த மாணவன் சந்திரசேகரன் (17),கணக்குப் பாடத்தில் 50 மதிப்பெண் பெற்று 3வது இடத்தைப் பெற்றார். இவர் பிசிகல் சயின்ஸ் பிரிவில் 49.58 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவனின் தந்தை பாலசுப்ரமணியம், கோவை அரசு கலைக் கல்லூரியில் கணக்கு ஆசிரியராக உள்ளார். தாயார்ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரி உமாமகேஸ்வரி எம்.சி.ஏ. முடித்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவன் சந்திரசேகர் கூறியதாவது:
இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பிளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண் பெறுவேன் என்றநம்பிக்கை உள்ளது. என் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமே எனது வெற்றிக்கு காரணம்.
நான் கம்ப்யூட்டர் இன்ஜினியராகவோ, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறையிலோ முன்னேற வேண்டும்என நினைக்கிறேன். கடின உழைப்பும் ஆண்டவன் அருளும் எனக்கு உறுதுணையாக இருந்தது என்றார்சந்திரசேகர்.












Click it and Unblock the Notifications