ஸ்டாலின் மீது ரூ. 182 கோடி ஊழல் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் ரூ. 182 கோடி வரை ஊழல்செய்திருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிதமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில் மாநகராட்சி எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஆளுநர்பாத்திமாபீவியிடம் மனு கொடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை புறக்கணித்தஎதிர்க்கட்சியினர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல் தலைமையில்ஆளுநர் மாளிக்கைக்குச் சென்றனர். அங்கு ஆளுநர் பாத்திமா பீவியைச் சந்தித்துஸ்டாலின் மீது ஊழல் புகார் சுமத்தினர்.

அவர்கள் கொடுத்த மனுவில், சென்னை நகரில் 9 சிறிய மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல், 1996 முதல் 2000 வரை சென்னை நகரில் சாலைகளை வெட்டிச்சேர்த்தது தொடர்பான பணிகளில் ரூ. 150 கோடி ஊழல், மாநகராட்சி கட்டிடங்கள்கட்டியதில் ரூ. 10 கோடி ஊழல், நேப்பியர் பாலம் கட்டியதில் ரூ. 40லட்சம் ஊழல்,வேதி பொருட்கள் வாங்கியதில் ரூ. 1 கோடி ஊழல், பஸ் ஸ்டாப்புகள் அமைத்ததில் ரூ.10 லட்சம் ஊழல் ஆகியவை நடந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு மொத்தமாக ரூ. 182.5 கோடி அளவுக்கு நஷ்டத்தைஏற்படுத்தி விட்டார் ஸ்டாலின். இதன் அடிப்படையில் விசாரணை நடத்த ஆளுநர்உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+