சீனாவில் நிலநடுக்கம்: உயிர்ச்சேதம் இல்லை
பீஜிங்:
சீனாவின் தென் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை காலை 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து சீனாவில் உள்ள சின்ஹூவா பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:
சீனாவின் தெற்குப்பகுதியில் உள்ள யான்யூவான், சிச்சுவான் ஆகிய மாகாணங்களில் வியாழக்கிழமை காலைதிடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்தஎந்தத் தகவல்களும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
யான்யூவான் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இங்கு கடந்த 50 ஆண்டுகளில் 6.0 என்றரிக்டர் அளவில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் யூவோன் மாவட்டத்தில் 5.9 மற்றும் 6.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்ஏற்பட்டது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 1, 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications