ராஜஸ்தான் ராணுவ ஆயுதக் கிடங்கில் தீ: கோடிக்கணக்கில் சேதம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீகங்காநகர் (ராஜஸ்தான்):

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கார் ராணுவ ஆயுதக்கிடங்கில் திடீரென்றுவியாழக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்கு உள்ளது.இந்த ஆயுதக் கிடங்கில் வியாழக்கிழமை நண்பகல் சரியாக 12 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான ரூபாய்பெறுமானமுள்ள ஏவுகணைகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் ஆகியவை தீக்கிரையாகின என்று மட்டும் தெரியவந்துள்ளது.

பல தீயணைப்பு படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக, இந்த வருடத் தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் சேதமடைந்தன.

இதே போல் கடந்த வருடம் ஏப்ரல் 29 ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் உள்ள ஆயுதக் கிடங்கில் தீ விபத்துஏற்பட்டது. இச்சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதில் 10,000 டன் எடையுள்ள வெடிமருந்துகள்,ஆயுதங்கள் ஆகியவை சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.400 கோடி ஆகும்.

மேலும் கடந்த வருடம் ராஜஸ்தான் மாநிலம் கான்பூரில் உள்ள மூன்று ஆயுதக் கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்தில்ரூ.4 கோடி மதிப்புள்ள வெடிமருந்துப் பொருட்கள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+