முதல்வர் பதவி வழக்கு: சட்டப்படி சந்திக்க ஜெ. தயார்
சென்னை:
முதல்வர் பதவியேற்றதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படிசந்திக்கத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்முடிந்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எம்எல்ஏக்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டசபைக்குப் புதியவர்கள். அவர்கள்சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எம்எல்ஏக்கள்கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
சட்டசபையில் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க பெரிதாக ஒன்றும் வியூகம் வகுக்கவேண்டிய அவசியமில்லை.
நெய்வேலி அனல்மின் நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் மத்திய அரசு தீர்க்கவேண்டிய பிரச்சனை. இருந்தாலும் தமிழக அரசும் இப்பிரச்சினையைத் தீர்க்கஆலோசனைகள் வழங்கி வருகிறது.
நான் முதல்வராகப் பதவியேற்றுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. அதைச் சட்டப்படி சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்றார்ஜெயலலிதா.