மணக்கோலம்..பிணக்கோலம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

சங்கரன்கோவில் அருகே திருமணக் கோஷ்டியினர் வந்த ஜீப் ஒரு பாலத்தில் மோதியதில், ஜீப்பில் பயணம் செய்தமணப்பெண் அதே இடத்தில் பலியானார்.

தூத்துக்குடி மாவட்டம் மருதன்வாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவல் பண்டாரத்தின் மகள் பழனிச்செல்வி (23).இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவருடைய தாய் மாமனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

வரும் வெள்ளிக்கிழமை இந்தத் திருமணம் மருதன்வாழ்வு கிராமத்திலேயே நடைபெறுவதாக இருந்தது. இதற்காகதன்னுடைய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஜீப்பில் இந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தார் பண்டாரம்.

சங்கரன்கோவில்-ராஜபாளையம் ரோட்டில் புதன்கிழமை அதிகாலை ஜீப் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்தவாகனத்தின் கண் கூசும் விளக்கொளியால் வழி தடுமாறிய டிரைவர் ஒரு பாலத்தில் மோதினார்.

இச்சம்பவத்தில் மணப்பெண் பழனிச்செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 4 பேர்படுகாயமடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+